ஞாயிறு, 21 ஜூன், 2015

56,830 சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள்


சென்னை,

ரூ.1,096 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 56 ஆயிரத்து 830 சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளை, முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள்

விழுப்புரம் மாவட்டம் - கண்டமங்கலத்தில் 17 ஆயிரம் சதுர அடி கட்டிட பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம்,கூட்டரங்கம், பயிற்சிக்கூடம் உள்ளிட்ட வசதிகளுடன்1 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடத்தை, முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், காஞ்சீபுரம், அரியலூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருப்பூர், திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 62 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 35 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள்;

கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 7 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 75 ஊராட்சி அலுவலகக் கட்டிடங்கள்;

பசுமை வீடுகள்

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 1,095 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முதல்-அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள 56,830 சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள்;

அரியலூர், திண்டுக்கல், காஞ்சீபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 24 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 193 கிராம ஊராட்சி சேவை மையங்கள்;

சேவை மையங்கள்

அரியலூர்- தா.பழூர் மற்றும் திருமானூர், மயிலாடுதுறை, சங்கரன்கோவில், எல்லாபுரம் ஆகிய இடங்களில் 1 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 வட்டார ஊராட்சி சேவை மையங்கள்;

காட்டாங்கொளத்தூர், கந்தர்வகோட்டை, வாலாஜா மற்றும் கே.வி.குப்பம், அரியலூர் ஆகிய இடங்களில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிக் கட்டிடங்கள்;

பாலங்கள்

சிவகங்கை- கல்லல், காளையார்கோவில் மற்றும் திருப்பத்தூர், திருமயம், உதகமண்டலம் ஆகிய இடங்களில் 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 சமுதாயக்கூடங்கள்;

காவேரிப்பட்டினம் மற்றும் வேப்பனஹள்ளி, வாழப்பாடி மற்றும் அயோத்தியாபட்டணம், தேவகோட்டை மற்றும் இளையான்குடி, மணிகண்டம், ரிஷிவந்தியம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் 13 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 பாலங்கள்;

ரூ.1,214 கோடி செலவில்...

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் 46 புதூர், ராமநாதபுரம் ஒன்றியத்தில் தேவிபட்டினம், பல்லடம் ஒன்றியத்தில் கோடங்கிபாளையம், விருதுநகர் ஒன்றியத்தில் கோட்டையூர் ஆகிய இடங்களில் 6 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 பேருந்து நிலையங்கள் போன்றவற்றை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இவைகளின் மொத்த மதிப்பு ரூ.1,214 கோடியே 18 லட்சம் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக