கூட்டுறவு வீட்டு வசதி சங்கம்
695 ஊழியர்கள் பணி நீக்க உத்தரவு நிறுத்தி வைப்பு
695 ஊழியர்கள் பணி நீக்க உத்தரவு நிறுத்தி வைப்பு
சேலம், டிச.11_ தமிழ்-நாடு முழுவதும் 1,117 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் 4 ஆயிரம் பேர் பணியாற்று-கின்றனர். இந்த சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி கடன் வசூலாகாமல் உள்ளது. இதனால், ஊழியர்களுக்கு சம்பளத்தை நிறுத்தி வைத்து, தமிழ்நாடு கூட்டு-றவு வீட்டுவசதி இணை-யம் உத்தரவிட்டது. கடந்த அக்டோபர் முதல் ஊழியர்கள் சம்பளமின்றி பணியாற்றுகின்றனர். இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் 303 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் உபரியாக உள்ள 695 பணியாளர்-களை பணிநீக்கம் செய்ய கடந்த சில நாள்களுக்கு முன் உத்தரவிடப்-பட்டது.
இந்த உத்தரவை நிறுத்தி வைக்குமாறு தொமுச தலைவர் குப்பு-சாமி, பொதுச்செய-லாளர் சண்முகம் ஆகி-யோர் முதல்வர் கலைஞ-ரியிடம் கோரிக்கை வைத்-தனர். இதையடுத்து, பணிநீக்கம் செய்ய பிறப்-பித்த உத்தரவை, நிறுத்தி வைத்து பதிவாளர் டி.பி.-யாதவ் நேற்று உத்தர-விட்டார்
| Last updated 01/31/2012 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக