குமாரமுருகன்First Published : 17 Apr 2010 01:21:20 AM IST
Last Updated : 17 Apr 2010 11:07:47 AM IST
கடையநல்லூர், ஏப். 16: தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் பெற்றுள்ள கடன்கள், பண்ணை சாரா கடன் தீர்வுத் திட்டத்தின் கீழ் தீர்க்கப்படுமா என பயனாளிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் சுமார் 2 லட்சம் பேர் கடன் பெற்று வீடுகளைக் கட்டியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள்.
விவசாயத்தில் போதிய வருவாய் இல்லாத நிலையில் இவர்களால் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் விளைவாக கடன்சுமை பல்மடங்கு பெருகி அவர்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய லீக் கட்சியின் மாநிலச் செயலரும், கூட்டுறவு வீட்டு வசதி சங்கக்கடனால் பாதிக்கப்பட்டவர்கள் நலச்சங்கத்தின் தலைவருமான கடையநல்லூர் வி.எஸ்.கமருதீன் கூறியதாவது:
அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வீட்டுக்கடனுக்கு குறைந்த வட்டியே வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் தொடக்கத்தில் 16 முதல் 17 சதவிகித வட்டியும், தவணைத் தவறிய நிலையில் 18 முதல் 19 சதவிகித வட்டியும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கடன் தொகையை விட, பல மடங்கு அதிகமாக பணம் திருப்பிச் செலுத்திய பின்னரும் கடன் தீர்ந்தபாடில்லை.
இதனால், கடன் வாங்கிய பலர், வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
மேலும், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றுள்ள பலரும் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்பவர்களாகவே உள்ளனர். தவணைக் காலம் தாண்டி பணம் கட்டுபவர்களுக்கு அபராத வட்டி, தவணை தவறிய வட்டி என பலவகையான வட்டிகளைக் கணக்கிட்டு, இதர செலவினங்களையும் சேர்த்து வசூலித்து வருவதால் அசல் தொகை அப்படியே இருந்து வருகிறது.
தாட்கோ மூலம் வீடு கட்ட வாங்கப்பட்ட கடன் தொகையையும், விவசாயிகளின் விவசாயக் கடன்களையும் அரசு தள்ளுபடி செய்துள்ளது.
இந் நிலையில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன்பெற்றவர்களின் கடனை பண்ணை சாரா கடன் தீர்வு திட்டத்தின்கீழ் கொண்டு வந்து, அவர்கள் பெற்ற கடனுக்கு, கடன் பெற்ற தேதியிலிருந்து 6 சதவீத வட்டி மட்டும் வசூலிக்க வேண்டும் எனவும் செலவினங்களையும், அபராத வட்டியினையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், இதற்கான நடவடிக்கை இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு வருகின்ற மானியக் கோரிக்கையின்போது இது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றார் அவர்.****
Last Updated : 17 Apr 2010 11:07:47 AM IST
கடையநல்லூர், ஏப். 16: தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் பெற்றுள்ள கடன்கள், பண்ணை சாரா கடன் தீர்வுத் திட்டத்தின் கீழ் தீர்க்கப்படுமா என பயனாளிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் சுமார் 2 லட்சம் பேர் கடன் பெற்று வீடுகளைக் கட்டியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள்.
விவசாயத்தில் போதிய வருவாய் இல்லாத நிலையில் இவர்களால் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் விளைவாக கடன்சுமை பல்மடங்கு பெருகி அவர்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய லீக் கட்சியின் மாநிலச் செயலரும், கூட்டுறவு வீட்டு வசதி சங்கக்கடனால் பாதிக்கப்பட்டவர்கள் நலச்சங்கத்தின் தலைவருமான கடையநல்லூர் வி.எஸ்.கமருதீன் கூறியதாவது:
அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வீட்டுக்கடனுக்கு குறைந்த வட்டியே வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் தொடக்கத்தில் 16 முதல் 17 சதவிகித வட்டியும், தவணைத் தவறிய நிலையில் 18 முதல் 19 சதவிகித வட்டியும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கடன் தொகையை விட, பல மடங்கு அதிகமாக பணம் திருப்பிச் செலுத்திய பின்னரும் கடன் தீர்ந்தபாடில்லை.
இதனால், கடன் வாங்கிய பலர், வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
மேலும், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றுள்ள பலரும் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்பவர்களாகவே உள்ளனர். தவணைக் காலம் தாண்டி பணம் கட்டுபவர்களுக்கு அபராத வட்டி, தவணை தவறிய வட்டி என பலவகையான வட்டிகளைக் கணக்கிட்டு, இதர செலவினங்களையும் சேர்த்து வசூலித்து வருவதால் அசல் தொகை அப்படியே இருந்து வருகிறது.
தாட்கோ மூலம் வீடு கட்ட வாங்கப்பட்ட கடன் தொகையையும், விவசாயிகளின் விவசாயக் கடன்களையும் அரசு தள்ளுபடி செய்துள்ளது.
இந் நிலையில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன்பெற்றவர்களின் கடனை பண்ணை சாரா கடன் தீர்வு திட்டத்தின்கீழ் கொண்டு வந்து, அவர்கள் பெற்ற கடனுக்கு, கடன் பெற்ற தேதியிலிருந்து 6 சதவீத வட்டி மட்டும் வசூலிக்க வேண்டும் எனவும் செலவினங்களையும், அபராத வட்டியினையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், இதற்கான நடவடிக்கை இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு வருகின்ற மானியக் கோரிக்கையின்போது இது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றார் அவர்.****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக