ஞாயிறு, 28 ஜூன், 2015

சங்கம் நஷ்டத்தில்

http://www.dinamalar.com/index.aspகூட்டுச்சதி மூலம் ரூ.74 லட்சம் மோசடி செய்த அதிகாரிகள்ரூ.4 கோடி கடனில் மூழ்கிய கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்

ராசிபுரம்:ராசிபுரம் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், நான்கு கோடி ரூபாய் அளவிற்கு கடனில் மூழ்கிய நிலையில், அதிகாரிகளின் கூட்டுச்சதியால், 74 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர்.கடந்த, 1991ம் ஆண்டு, ராசிபுரம் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் துவங்கப்பட்டு, இதில், 395 ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு, நிலம் வாங்கி வீட்டுமனை பிரித்து கொடுக்க, ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, 160 பேர் மனைக்காக, முன்பணமாக தலா, 25 ஆயிரம் ரூபாய் செலுத்தினர்.இதில், ராசிபுரம் சிவானாந்தா சாலையில், 7.85 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, எவருக்கும் நிலம் பிரித்து தரவில்லை. 2002ம் ஆண்டு, மார்ச் மாதம், சங்கத்தின் விதிமுறைக்கு எதிராக, 600க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை, தனி அலுவலர் திருப்பதி, செயலாளர் வேலாயுதம் ஆகியோர் போலியாக சேர்த்தனர்.
அவர்களிடம் இருந்து, ஒவ்வொரு உறுப்பினரிடம் இருந்தும், தலா ஒரு லட்சம் கடன் பெற்றுத் தருவதாக கூறி, கூட்டுறவு இணையத்தில் இருந்து, நான்கு கோடி ரூபாய் பெற்று, உறுப்பினர்களுக்கு பாதியளவு கடன் கொடுத்தனர். இதற்காக, இணையத்திடம் போலியான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டது.
இந்த முறைகேடுகள் தொடர்பான புகார்கள், மாநில கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் வரை சென்றும், 2003ம் ஆண்டு முதல், நடப்பாண்டு வரை, முறையான தணிக்கைக்கு உட்படுத்தவில்லை. 2003ம் ஆண்டு தனி அலுவலராக இருந்த ஜெகநாதன், 2009ம் ஆண்டு, தனி அலுவலராக பொறுப்பேற்ற அரூர் தனசேகரன் ஆகியோர், ஏற்கனவே நடந்த மோசடி வேலைகளோடு கூட்டுச்சதி செய்து, அவர்களும், பல லட்சம் ரூபாய் மோசடி செய்தனர்.இதற்கிடையே, 2010ம் ஆண்டு, செயலாளர் வேலாயுதம், தனி அலுவலர் ஜெகநாதன் ஆகியோர், போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அதன்பின், தனி அலுவலர் என்ற பதவி மாற்றப்பட்டு, ஃபோர்டு நிர்வாகம் வந்ததால், சங்கத்தின் செயல்பாடுகள் முழுமையாக முடங்கிப் போனது. ஏற்கனவே, போலி உறுப்பினர்களால் நான்கு கோடி ரூபாய் கடனும், திரும்ப பெற முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், 2011ம் ஆண்டு சங்கத்தின் தனி அலுவலர் மற்றும் முறைகேடுகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட தனசேகரன், சேலம் மண்டல கூட்டுறவு சங்க துணை பதிவாளர் (வீட்டுவசதி) சேகரிடம், பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகாரை கொடுத்தார்.
அவர், சேலம் வணிக குற்றப்புலனாய்வு போலீஸாரிடம் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சங்கத்தின் முன்னாள் செயலாளர் வேலாயுதம், தனி அலுவலர் ஜெகநாதன் ஆகிய இருவரையும், நேற்று முன்தினம் இரவு கைது செய்து விசாரிக்கிறார். மேலும், தலைமறைவாக உள்ள முன்னாள் தனி அலுவலர்கள் அரசு, அரூர் தனசேகரன் ஆகியோரை, போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் மதியழகன் கூறியதாவது:கூட்டுறவு இணையத்தின் மூலம் பெறப்பட்ட கடன், நான்கு கோடி ரூபாய் வசூலிக்க முடியாமல் உள்ளது. இதில், 300 உறுப்பினர்கள் கடனாகவும், 160 உறுப்பினர்கள் நிலத்தின் மீதும் கடன் பெற்றனர். தற்போது, சங்கம் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக