புதன், 22 ஜூலை, 2015

தமிழகம் Published: July 5, 2015 11:39 IST Updated: July 5, 2015 11:39 IST தமிழகம் முழுவதும் கடனை திரும்ப செலுத்திய 12,738 பேருக்கு வீட்டு பத்திரங்களை வழங்க வேண்டும்: மாநில கூட்டுறவு வீட்டுவசதி இணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Published: July 5, 2015 11:39 ISTUpdated: July 5, 2015 11:39 IST

தமிழகம் முழுவதும் கடனை திரும்ப செலுத்திய 12,738 பேருக்கு வீட்டு பத்திரங்களை வழங்க வேண்டும்: மாநில கூட்டுறவு வீட்டுவசதி இணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


தமிழகத்தில் வீட்டு வசதி சங்கங் களில் பெற்ற கடனை திரும்பச் செலுத்திய 12,738 பேருக்கு உடனடியாக அவர்களின் வீட்டு பத்திரங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநில கூட்டுறவு வீட்டு வசதி இணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த ஏ.சகாயஅரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் 619 நகர வீட்டு வசதி சங்கங்களும், 197 கிராம வீட்டு வசதி சங்கங்களும் உள்ளன. இந்த சங்கங்களுக்கு மாநில கூட்டுறவு வீட்டு வசதி இணையம் நிதி உதவி அளிக்கிறது. வீட்டு வசதி சங்கங்கள் சார்பில் தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 11 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. சங்கத்தின் உறுப்பினர்கள் கடன் பெறும்போது தங்களின் வீடுகளை பிரதமச் சங்கங்களின் பெயரில் அடமானம் செய்து கொடுக்கின்றனர். அந்த அடமானப் பத்திரங்கள் மாநில இணையத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
தமிழகத்தில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் மாநில அரசு பல் வேறு கடன், வட்டி தள்ளுபடி திட்டங் களை அறிவித்தது. இருப்பினும் தள்ளுபடித் தொகை வீட்டு வசதி சங்கங்களுக்கு இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை.
கடந்த 2005-ம் ஆண்டில் கடன் வட்டி விகிதத்தை அரசு குறைத்தது. இந்த சலுகையை பிரதமச் சங்கங்களுக்கு இணையம் வழங்கவில்லை. இதனால், வீட்டு வசதி சங்கங்களின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டு, கடன் வசூல் தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வீடுகளை அடமானம் வைத்து கடன் பெற்ற உறுப்பினர்கள் கடன் தொகையை முழுமையாக செலுத்திய பிறகும், இணையத்தில் கடன் இன்னும் நிலுவையாக இருப்பதாகவே உள்ளது. இதனால் கடனைத் திரும்பச் செலுத்திய பிறகும் வீட்டு பத்திரங்களை திரும்பப் பெற முடியாத நிலையில் உறுப்பினர்கள உள்ளனர். எனவே, கடனை திரும்ப செலுத்திய 12,738 பேருக்குரிய வீட்டு பத்திரங்களை திரும்ப வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எல்.ஜார்ஜ் பால் ஆண்டோ வாதிட்டார். விசாரணைக்குப் பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பத்திரங்களை திரும்ப வழங் கக்கோரி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் விடுத்த கோரிக்கையை ஏற்க முடியாது. இருப்பினும், கடனை முழுமையாக செலுத் திய உறுப்பினர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியது. அவர்களின் சொத்து பத்திரங்களை திரும்ப வழங்குவது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வில்லை என்பதற்காக பத்திரங் களை திரும்ப வழங்கும் நடவடிக் கையை தள்ளிப்போடக்கூடாது என நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக